டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல்வெள்ளி வென்றார்.டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மகளிர் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சீனா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். நேற்று நடந்த நடந்த அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை மியாவ் ஜாங்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா பென். ஆட்டத்தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனையை பவினா ஆட்ட இறுதியில் 3-2 செட் கணக்கில் வென்றார்.