டோக்கியோ பாராலிம்பிக்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேலுக்கு வெள்ளி..! குடியரசு தலைவர் வாழ்த்து

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல்வெள்ளி வென்றார்.டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மகளிர் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சீனா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். நேற்று நடந்த நடந்த அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை மியாவ் ஜாங்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா பென். ஆட்டத்தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனையை பவினா ஆட்ட இறுதியில் 3-2 செட் கணக்கில் வென்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் சீன விராங்கனை ஜோவ் இங்-கிடம் 3-0 செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதனையடுத்து பவினாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: