காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் பள்ளியில், உயர்ரக தொழில் நுட்ப அறிவியல் ஆய்வக் கூடத்தை, மாவட்ட முதன்மைக் கல்வி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெருவில் சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில், இந்திய அரசின் நிதி ஆயுத் மூலம் அடல் டிங்கரிங் என்ற உயர்ரக தொழில்நுட்ப அறிவியல் ஆய்வக் கூடம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சஞ்சீவி ஜெயராம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஞானப்பண்டிதர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் கலந்து கொண்டு, தொழில்நுட்ப அறிவியல் ஆய்வுக் கூடத்தை திறந்து வைத்தார்.