ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலை பாலாஜி நகர் பகுதியில் கார் ஒன்றில் குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், தனிப்பிரிவு எஸ்.ஐ. பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் ஹன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த கார் யாருக்கு சொந்தமானவை என போலீசார் விசாரித்ததில், அவை அதே பகுதியில் வசிக்கும் சத்ராராம் (25 ) என்பது தெரியவந்தது. மேலும், அவரை போலீசார் விசாரித்ததில், குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.