ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள தலைகுந்தா பகுதியில் காமராஜ் சாகர் அணை உள்ளது. இந்த அணைக்கு காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தண்ணீர் செல்கிறது. காந்திநகர் பகுதியில் இருந்து செல்லும் தண்ணீர் தலைகுந்தா பஜார் பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் வழியாக செல்கிறது. விவசாய நிலங்களில் இருந்து செல்லும் இந்த நீரோடையில் மண் அரித்து சென்று, பாலத்தின் அடியில் சேர்ந்துவிட்டது. இதனால், தண்ணீர் செல்ல வழியின்றி, மழைக்காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் ஓடும் நிலை ஏற்பட்டு வந்தது. மேலும், அங்குள்ள கடைகளுக்குள்ளும் தண்ணீர் செல்வது வாடிக்கையாக இருந்தது.