புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் வேளாண்துறையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காய்கறி விதைப்பைகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 11 டிராக்டர்கள், 9 பவர் டிரில்லர்கள், நெல் நடவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கொரோனாவை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார். வருவாயை பெருக்கும் வகையில் புதுச்சேரி பட்ஜெட் இருக்கும் என்று நம்புகிறேன் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Related Stories: