பள்ளியா: ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாரதிய கிசான் சங்கம், செப்டம்பர் 8ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக எச்சரித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் பொருளாளர் யுகல் கிஷோர் மிஸ்ரா கூறியதாவது: குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளின் விளை பொருள்கள் கொள்முதல் செய்யப்படுவதை வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்காக மோடி அரசுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கிறோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த மாதம் 8ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.