சென்னை: தமிழக சட்டப் பேரவையில் துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசியதாவது: குடிநீர் வடிகால் வாரியம் கலைஞர் கொண்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வாரியமே செயல்படவில்லை. எனவே, கூட்டு குடிநீர் திட்டத்தில் தனி கவனம் எடுக்க வேண்டும். உரிய முறையில் பணியாளர்களை நியமித்தால்தான் குடிநீர் வழங்க முடியும். கூட்டு குடிநீர் திட்டங்களை முறைப்படுத்த வேண்டும். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: கடந்த 10 ஆண்டுகளாக கூட்டு குடிநீர் திட்டம் எதுவுமே செயல்படுத்தவில்லை என்ற ஒரு தவறான செய்தியை சொல்லியிருக்கிறார். கொள்கை விளக்க குறிப்பிலே இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான்.