நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் மற்றும் பர்கிட்மாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நவீன மருத்துவ கருவி வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் ஸ்கேன், இசிஜி கருவிகள் கம்ப்யூட்டர் வசதிகள், ஆய்வகம், குழந்தைபேறுக்கான சிகிச்சை கருவிகள் உள்ளிட்டவைகள் ரூ.1.8கோடி மதிப்பில் கங்கைகொண்டானில் உள்ள போஜ் நிறுவன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட கட்டிடங்களை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு துவக்கிவைத்தார்.