மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சென்மேரிஸ் தனியார் பள்ளி ஆகிய இரு இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாமல்லபுரம் பேரூராட்சியில், செயல் அலுவலராக ராஜேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து இருந்து, கொரோனா 3வது அலை பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுத்து, முக கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறார்.