பாணாவரம்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் சுற்றுப் பகுதிகளான கூத்தம்பாக்கம், புதூர், மாலையமேடு, மங்களம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக திடீரென பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், ஆங்காங்கு இருக்கும் ஆடு மாடுகளை குறிவைத்து தாக்கி, கடித்து குதறி வருகிறது. கூத்தம்பாக்கம் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்து வரும் முனிசாமி என்ற முதியவரின் மாட்டை நேற்று நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்து போனது.