சென்னை: உலக சாம்பியன் ஷிப் போட்டியில் சமீஹா பர்வீன் பெறப்போகும் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞருக்கும் நம்பிக்கை ஒளியூட்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நான்காவது உலக காது கேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை போலந்தில் நடக்கிறது. அதில் தமிழ்நாட்டை சார்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பாக பங்கேற்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமிதமான செய்தி.