உலக சாம்பியன்ஷிப்பில் சமீஹா பர்வீன் பெறும் வெற்றி சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞருக்கும் நம்பிக்கை ஒளியூட்டும்: அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

சென்னை: உலக சாம்பியன் ஷிப் போட்டியில் சமீஹா பர்வீன் பெறப்போகும் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞருக்கும் நம்பிக்கை ஒளியூட்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நான்காவது உலக காது கேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை போலந்தில் நடக்கிறது. அதில் தமிழ்நாட்டை சார்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பாக பங்கேற்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமிதமான செய்தி.

வாழ்வில் பல போராட்டங்களை தனது மன உறுதியாலும், கடுமையான உழைப்பாலும் தொடர்ந்து வென்று வரும் விராங்கனை சமீஹா பரவீன், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்டுவார் என்று அனைவரும் உறுதியாக நம்புகிறோம். லட்சியத்தை நோக்கி மனம் தளராமல் முன்னேறும் சமீஹா தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது வெற்றி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞருக்கும் நம்பிக்கை ஒளியூட்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: