புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய் சேதுபதி நேற்று சந்தித்து பேசினார். அப்போது சினிமா சூட்டிங் கட்டணத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேருடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி, பிரபல நடிகர் விஜய் சேதுபதி, பிரபல நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் படத்தின் சூட்டிங் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.