பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று, வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தாலும், ஓணம் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் வாழைத்தார் எடைமூலம் நடக்கும் விற்பனையின் போது, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும். தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வாழைத்தார் கொண்டு வரப்பட்டு, அவை தரத்திற்கேற்றார் போல் குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த இரண்டு வாரமாக விஷேச நாட்கள் மிகவும் குறைவால், சந்தைக்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தார்கள் சற்று குறைவான விலைக்கே விற்பனையானது.