திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதேபோல் கீழடி அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு நடக்கிறது. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் தலா 8 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கு முதுமக்கள் தாழி, எலும்புக்கூடுகள், பானைகள், பழங்கால வாள், விளையாட்டு பொருட்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. செப்டம்பருடன் பணிகள் முடிவடைய உள்ளன. இந்நிலையில், கீழடியில் உள்ள ஒரு குழியில் நேற்று சிவப்பு நிற சிறிய பானை கண்டெடுக்கப்பட்டது.