சிவகங்கை: சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் கோமாளியம்மன் மற்றும் மண்டை கருப்பணசாமி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்படும். கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டாக நடைபெறவில்லை. இக்கோயிலில் நேற்றுமுன் தினம் ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி கோமாளிபட்டி கண்மாயில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.