விழுப்புரம்: பெண் எஸ்பி பாலியல் புகார் தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பியாக பணியாற்றிய கண்ணன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளில் வழக்குபதிந்து, 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை, டிசம்பர் 20ம்தேதிக்குள் விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த 9ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நேரில் ஆஜராகினர். குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்கு நேற்றைய தினம் (16ம்தேதி) ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.