மதுரை ஆதீனத்திற்கு பளிங்கு சிலை

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவால் கடந்த 13ம் தேதி காலமானார். மதுரை நகைக்கடை பஜார் பகுதியில் உள்ள ஆதீன மடத்திற்கு வரும் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, மறைந்த ஆதீனத்தின் 500 கிலோ எடை கொண்ட பளிங்கு சிலையை மடத்தில் வைத்துள்ளனர். இந்த சிலை கடந்தாண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு மடத்தில் வைக்கப்பட்டிருந்தது. மதுரை ஆதீனம் மிகவும் விரும்பி பயன்படுத்திய புல்லட் உள்ளிட்ட டூவீலர்களும் மடத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: