இம்பால் : மேகாலயாவில் முன்னாள் கிளர்ச்சி குழு தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. மேகாலயாவில் முன்னாள் கிளர்ச்சி குழு தலைவர் செரிஷ்ஸ்டார்ஃபீல்ட் தாங்கீவ் என்பவர் போலீஸ் சோதனையின் போது, அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டார். தாங்கீவ் கொலைக்கு போலீசாரே காரணம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் சுதந்திர
தினத்தன்று மாநிலம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியுடன் ஆங்காங்கே பிரமாண்ட பேரணிகளையும் நடத்தினர்.