முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே நிலைதடுமாறிய கார் வாய்க்காலில் பாய்ந்தது. டிரைவர் உயிர் தப்பினார். கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கோட்டகம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை புதுக்கோட்டையிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலைதடுமாறி ஓவரூர் சாலை செல்லும் பகுதியில் உள்ள சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது.