குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் கமலா வயது (60). இவர் ஊட்டியிலுள்ள தங்கை வீட்டிற்கு செல்ல தயாரானார். எல்லநள்ளிக்கு சென்று பஸ் ஏற நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அங்கிருந்த தேன் கூட்டை கலைத்தனர். அப்போது அந்த வழியே வந்த கமலாவை தேனீக்கள் மொய்க்க தொடங்கின. இதனால் மூதாட்டியின் முகத்தில் காயம் மற்றும் வீக்கம் ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் அலறித்துடித்த கமலா சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியே காரில் சென்றவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்க சென்றனர்.