வேதாரண்யத்தில் அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் நாகை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியுடன் ஏடிஎம் உள்ளது. நேற்றுமுன்தினம் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணம் நிரப்பி உள்ளனர். நேற்று அதிகாலை வந்த மர்ம நபர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

ஆனால் இயந்திரத்தின் மேல் பகுதி உடைக்கப்பட்ட நிலையில் பணம் இருக்கும் அறையை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த வேதாரண்யம் டிஎஸ்பி மகாதேவன், இன்ஸ்பெக்டர் சுப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நாகையிலிருந்து தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: