சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நேற்று முடிவடைந்தது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை தமிழக ஆளுநர் நியமித்து உத்தரவிட்டார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.