மாமல்லபுரம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, ஆடி அமாவாசையில் கடற்கரை உள்ளிட்ட பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், மாமல்லபுரம் கடற்கரை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழ் மாதம் ஆடி, தை அமாவாசை தினத்தில் கடற்கரை, ஆற்றாங்கரை, கோயில் குளம் போன்ற நீர்நிலை பகுதிகளில் இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். மாமல்லபுரம் கடற்கரையில் ஆண்டுதோறும் பலர் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.