கலைஞரின் நினைவு தினத்தையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக சார்பில் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஊத்துக்கோட்டை விஏஒ அலுவலகம், அண்ணா சிலை, ரெட்டி தெரு, சாவடி தெரு, திருவள்ளூர் சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சம்சுதீன், அவைத்தலைவர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதிகள் மோகன், நெடுஞ்செழியன், தமிழ்செல்வம், மாணவரணி கோகுல், ஜீவா, பரீத், மகளிரணி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல் அன்னதானம் வழங்கினார்.

இறுதியில், இளைஞரணி அப்துல் ரகீம் நன்றி கூறினார். இதேபோல், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், சம்பத், ரவி ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அன்னதானம் வழங்கினார்.  

Related Stories: