ஊட்டி: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் முட்டைகோஸ் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தோட்டக்கலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 7600 ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இதில், கேரட் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. இதுதவிர, உருளைகிழங்கு, பீட்ரூட், பூண்டு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. இந்த சூழலில், கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவகாற்றின் தீவிரம் காரணமாக நல்ல மழை பெய்தது. கேத்தி பாலாடா, கோலனிமட்டம், முத்தோரை பாலாடா, கப்பத்தொரை உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கின.