ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் யானைகள் ஊருக்குள் புகுந்து வயல்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த 2018 - 2020 வரையிலான காலத்தில் 204 பேரை யானைகள் கொன்றுள்ளன. அதேபோல், 45 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும், யானைகளால் பயிர்கள் நாசம் செய்யப்பட்ட சம்பவம் 66 ஆயிரத்து 582 நடந்துள்ளன. 5 ஆயிரத்து 47 வீடுகள் நாசமாகி உள்ளன. இதர சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 3.151 நடந்துள்ளன.இதற்கெல்லாம் ஒரே காரணம். யானைகள் உணவு தேடி ஊருக்குள் வருவதுதான். அதை ஊருக்குள் வரவிடாமல் தடுக்க இம்மாநில அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. ஊருக்குள் வரும் யானைகள், நெற்பயிர்களை அதிகமாக தின்று விட்டு செல்கின்றன.