போதைப்பொருட்களை வௌிநாட்டுக்கு கடத்த முயன்ற இருவர் கைது

சென்னை: வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னை மண்டல போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சென்னையில் இயங்கிவரும் வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது, ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட இருந்த டீ உபகரணப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பார்சலில் 5 கிலோ தடை செய்யப்பட்ட கெமிக்கல் போதைப்பொருளான சூடோஎபிட்ரின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பைசல் மற்றும் பாஷா ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: