தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் கடந்த புதனன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது ஆட்டோ மோதி உயிரிழந்தார். சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்த போது, நீதிபதி மீது வேண்டுமென்றே ஆட்டோ மோதிவிட்டு தப்பிச்சென்றது தெரிந்தது. எனவே திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஜார்க்கண்ட் அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.