பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை பணி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமச்சந்திராபுரம், பாண்டரவேடு ஊராட்சி உதயநிதி ஸ்டாலின் நகர், கொல்லாலகுப்பம் ஊராட்சி சி.என்.கண்டிகை ஆகிய கிராமங்களில் மாவட்ட முகமை திட்ட நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் முத்துரெட்டி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா, திருத்தணி நகர திமுக பொறுப்பாளர் வினோத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: