ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே குடியிருப்பு பகுதியில் 3 காட்டு யானைகள் புகுந்து முகாமிட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி மலைக்கிராமங்களில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் இரவுநேரங்களில் விவசாயிகள், பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரமான செம்மடைப்பட்டியில் இருந்து லெக்கையன்கோட்டை வழியாக உள்கோம்பை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தியது.
