தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்தது. இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று 1,947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.