இந்தியா உங்கள் முயற்சியை கண்டு பெருமை கொள்கிறது: பவானி தேவிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி: இந்தியா உங்கள் முயற்சியை கண்டு பெருமை கொள்கிறது என தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் மகளிர் வாள் வீச்சு சேபர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் டுனிசியா வீராங்கனை பென் அசீஸை 15-3 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வீழ்த்தி, இந்திய வீராங்கனை பவானி தேவி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று காலை நடந்த 2வது சுற்றுப் போட்டியில் பவானி தேவியும், வாள் வீச்சில் உலக தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மானென் புருனெட்டும் மோதினர். தர வரிசையில் பவானி தேவி, தற்போது 36வது இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் துவக்கம் முதலே, புருனெட்டை எதிர்கொள்ள முடியாமல் பவானி தடுமாறினார்.  

துவக்கத்தில் 2-8 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய புருனெட், இறுதியில் 15-7 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவியை வீழ்த்தி, இப்போட்டியில் வெற்றி பெற்றார். தனது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தனது டிவிட்டர் பக்கத்தில் பவானி தேவி உருக்கமாக பதிவிட்டார். இந்நிலையில் பவானி தேவியை ராகுல் காந்தி பாராட்டி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; உங்களது முயற்சியை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது’ வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொறு படி.. என பதிவிட்டுள்ளார்.

Related Stories: