திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்ததான மையத்தை திருவள்ளூரில் உள்ள தனியார் அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் பராமரித்து வருகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ரத்ததான மையத்தினை ரூ.75 லட்சத்தில் பராமரிப்பு பணியினை மேற்கொண்டும், அதற்காக தேவைப்படும் உபகரணங்களை வழங்கவும் அந்த அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை தொடர்ந்து தனியார் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனையில் ரத்தக் கூறுகளை சேமிக்கப் பயன்படுத்தப்படும் மைனஸ் 80 டிகிரி கொண்ட உறைவிப்பானை வழங்கும் விழா நடந்தது.