களியக்காவிளை: குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் கடந்த 18ம்தேதி அருமனையில் நடந்தது. இதில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவரும், பாதிரியாருமான ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மாற்று மதத்தினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருமனை போலீசார் நேற்று முன்தினம் மதுரை அருகே காரில் சென்று கொண்டிருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.