தமிழகம் காஞ்சிபுரத்தில் பழிக்குப் பழியாக நடந்த மோதல் வெடிகுண்டு வீச்சில் தம்பி தப்பியதால் அண்ணன் சரமாரி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை Jul 25, 2021 காஞ்சிபுரம் காஞ்சிபுரம்: வெடிகுண்டு வீசியதில் தம்பி தப்பியோடியதால் ஆவேசம் அடைந்த கும்பல், அண்ணன் மீது வெடிகுண்டு வீசியதுடன் சரமாரி வெட்டிக்கொலை செய்தனர். காஞ்சிபுரத்தில் நேற்றிரவு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டு பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரின் தம்பி ரகு (38). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது. இவர்கள், கடந்த 2013ம் ஆண்டு பிரபல ரவுடிகள் தினேஷ், தியாகுவின் கூட்டாளி பிரபாகரனின் அண்ணனை வெட்டி கொலை செய்தனர். இதனால் பிரபாகரன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரகுவின் அண்ணனும் தேமுதிக பேச்சாளருமான சரவணனை வெட்டிக்கொலை செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அனைவரும் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தனர். இந்த நிலையில், இரண்டு வாரத்துக்கு முன் செந்தில்குமாரின் தந்தை நடராஜனின் 13ம் நாள் காரியம் நடைபெற்றது. இதையொட்டி நேற்றிரவு செந்தில்குமார், ரகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி செந்தில்குமாரின் தாய் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென 10க்கும் மேற்பட்டவர்வந்து அவரது வீட்டின் மீது சரமாரி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் அங்கிருந்த அனைவரையும் தாக்கத் தொடங்கினர். ரகுவை குறிவைத்து தாக்கிய போது அவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்த கும்பல், தாக்குதலை தடுக்க வந்த ரகுவின் அண்ணன் செந்தில்குமாரை சுற்றிவளைத்து சரமாரி வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பியோடியபோது சுமார் 100 மீட்டர் தூரம் விரட்டிச்சென்று தாக்கினர். இருப்பினும் அவர்களிடம் இருந்து தப்பியபோது அங்குள்ள முட்டு சந்தில் சிக்கிக்கொண்ட செந்தில்குமார் மீது வெடிகுண்டுகளை வீசியதுடன் சரமாரி வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்துடன் ஆவேசம் தணியாத கும்பல், அங்கு கிடந்த பாறாங்கல்லை மற்றும் கட்டைகளை எடுத்து செந்தில்குமார் தலையில் போட்டுவிட்டு தப்பினர். இந்த கும்பல் தாக்குதலில் காயம் அடைந்த செந்திலின் சகோதரிகள் கோடீஸ்வரி, மணிமேகலை, மனைவி சசிகலா ஆகிய 3 பேர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வந்து, கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, கொலை தொடர்பாக ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி ரகுவை கொல்ல குறிவைத்து வந்த கும்பல், அண்ணனை கொடூரமாக கொலை செய்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்று 4ம் ஆண்டு தொடக்கம் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம் பாலவாக்கம் பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு குடியிருப்போர் சங்கத்தினரால் ஆக்கிரமிப்பு
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநகர பேருந்து கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை
திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சி, திமுக தலைமைக்கழகம் அறிக்கை
நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற ரூ4 கோடி பறிமுதல் விவகாரம்; வருமான வரித்துறை விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
தலைமைச்செயலர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் நிறைவு: சீரான குடிநீர் – மின்சாரம் குறித்த அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்
செங்கல்பட்டில் மாயமான அரை மணி நேரத்தில் மூன்று வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்