புதுடெல்லி: ஒன்றிய அரசின் தடுப்பூசி திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாநிலங்களவையில் அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி எப்போது கிடைக்கும்? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பவார், ‘தடுப்பூசி வழங்குவதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை’ என்றார். முன்னதாக, 2021ம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு விடும் என்று அப்போதைய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட தலைவர்கள் உறுதி அளித்து வந்தனர்.