ஈரோடு: அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியார்துறையிடம் ஒப்படைப்பதை கண்டித்தும் ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு சேவை துறையில் அவசர சட்டம் கொண்டு வருவதன் மூலமாக நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தி செய்யும் 40 தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடுவதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அவசர சட்டம் கொண்டு வருவதன் மூலமாக மோடி அரசு சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதாகவும் எந்த நாட்டிலும் பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.