திருவொற்றியூர்: மின்வாரியம் சார்பில் எண்ணூரில் ரூ. 20.5 லட்சம் ரூபாய் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் கே.பி. சங்கர் எம்எல்ஏ தொடங்கிவைத்தார். சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர், உலக நாதபுரம், எர்ணாவூர் குப்பம் போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்யும் வகையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ரூ. 20.5 லட்சம் செலவில் 3 புதிய டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் புதிய மின் கேபிள்கள் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததை ஒட்டி இதன் துவக்கவிழா எண்ணூரில் நேற்று நடைபெற்றது.