திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் என்ற இடத்தில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசுமதி தலைமையிலான போலீசார் கடந்த 2ம் தேதிவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தபோது, அவர்களது உடலில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் டேப் ரோல் மூலம் சுற்றப்பட்டு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் 2 பேரையும் விடுவித்ததாக வீடியோ ஆதாரம் ஒன்று மாவட்ட எஸ்.பி. சீனிவாசனுக்கு கிடைத்தது.