குமரியில் காதல்மொழி பேசி வலையில் வீழ்த்தினார்; பிளஸ் 2 மாணவி பலாத்காரம், 10ம் வகுப்பு மாணவி கடத்தல்: வாலிபர் தலைமறைவு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்ததுடன், தற்போது வேறொரு மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் அபி (19). இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவியின் தாயார் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாணவியின் வீட்டுக்கு சென்ற அபி, அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தததாக கூறப்படுகிறது. இதே போல் பலமுறை மாணவியுடன், அபி உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென அபியின் நடவடிக்கைகள் மாறின. மாணவியுடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின், அபியின் நடவடிக்கைகளை கண்காணித்தார். அப்போது அவர் 14 வயதுடைய வேறொரு மாணவியை காதலித்து வருவது தெரிய வந்தது. புதிய காதலி கிடைத்ததால், பழைய காதலிக்கு குட்பை சொல்ல அபி முடிவு செய்ததையும் அறிந்து கொண்டார். இது தொடர்பாக அபியை சந்தித்து மாணவி கேட்ட போது, உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது என கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி இது தொடர்பாக தனது தாயாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது தாயாரும் அபியிடம் சென்று கேட்டபோது அவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி, அபி மீது புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அபி மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அபியை தேடி போலீசார் சென்ற போது அவர் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், களியக்காவிளையை சேர்ந்த பெண் ஒருவர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

அதில் 10 ம் வகுப்பு படிக்கும் தனது 14 வயது மகளை அபி கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தற்போது அபி மீது கடத்தல் வழக்கும் பதிவு செய்துள்ளனர். மாணவியை பலாத்காரம் செய்ததுடன், மற்றொரு மாணவியை அபி கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: