சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டிடம் பல ஆண்டுகளாக பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் புதிய நிழற்குடை கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்நிலையில் பழைய நிழற்குடை கட்டிடத்தின் மேல் தளம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. இந்த கட்டிடத்திற்குள் சிறுவர்கள் சென்று விளையாடுகின்றனர்.