காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிளஸ் 2 படித்த 12,991 பேரும் தேர்ச்சி பெற்றதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் 6946 மாணவிகள், 6045 மாணவர்கள் என மொத்தம் 12,991 பேர் பிளஸ் 2 படித்தனர். அதில், 65 பேர் மாற்றுத்திறனாளிகள். அரசு மற்றும் நகராட்சி பள்ளிகள் 52, அரசு உதவி பெறும் பள்ளிகள் 5, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 45 உட்பட மொத்தம் 102 பள்ளிகளில் 12,991 மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்தனர். கொரோனா பரவல் காரணமாக, மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு நடத்த முடியாமல் போனது இதையடுத்து அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் மாணவர்களின் கல்வி திறன் அறியாமல் போகும் நிலை ஏற்படும் என கல்வியாளர்கள் புகார் கூறினர்.