திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் எம்.எஸ்.பிரசாத், தொழிலதிபர். இவர் கோவையை சேர்ந்த தங்க வடிவமைப்பு நிபுணர்களைக் கொண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்க தங்க கத்தி (சூரிய கடாரி) தயார் செய்துள்ளார். இந்த கத்தி சுமார் 6.5 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க 6 மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில், திருமலையில் எம்.எஸ்.பிரசாத் குடும்பத்தினர் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, தங்க கத்தியை கூடுதல் செயல் அதிகாரி தர்மாவிடம் வழங்கினர்.