திருத்தணி: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடுதலாக ஆதார் பதிவு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தபால் நிலையம் மற்றும் திருத்தணியில் உள்ள இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி உள்பட 9 இடங்களில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஆதார் அட்டைக்கும் புகைப்படம் எடுக்கும் பணி சில நாட்களுக்கு முன் மீண்டும் துவங்கியது. இதையடுத்து திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மேற்கண்ட இடங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவும் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கும் வருகின்றனர்.