விளை நிலங்கள் நடுவே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைப்பதை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: கெயில் நிறுவனம் எரிவாயு குழாயை, புதிதாக அமைக்கப்பட உள்ள தர்மபுரி-ஓசூர் நான்கு வழிச்சாலையில் சாலையோரம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளை நிலங்களின் நடுவே எரிவாயு குழாய் பதிக்கும் இப்பணிகளை உடனடியாக தடுத்தி நிறுத்தி, விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி: ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், 6.61 சதவீதம் தமிழ்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 1.93 கோடி தடுப்பூசிகள் தான் செலுத்தப்பட்டு இருக்கின்றன.எனவே, முதலமைச்சர் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, புள்ளி விவரங்களை பிரதமரிடம் நேரில் சென்று எடுத்துரைத்து, தடுப்பூசிகளைப் பெற வேண்டும்.

Related Stories: