லக்னோ: உத்தரபிரதேச சட்டப் பேரவை ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிய ைதடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவை செயலக ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிந்து வரக் கூடாது என்றும், செயலகத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப சாதாரண ஆடைகளை அணிந்து வருமாறும் பேரவை இணைச் செயலாளர் நரேந்திர குமார் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை, ‘சட்டப் பேரவை செயலக ஊழியர்கள், அலுவலக நேரங்களில் ஜீன்ஸ், டி-ஷர்ட்கள் போன்ற அணிந்து வரக்கூடாது. பேரவை செயலகத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப, அனைவரும் சாதாரண உடை அணிந்து பணிக்கு வரவேண்டும்.