முக்கிய செய்தி விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி Jul 18, 2021 டோக்கியோ ஒலிம்பிக் ஒலிம்பிக் கிராமம் டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்னும் 5 நாட்களில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். கொரோனாவினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவலை வெளியிட்டு இருக்கும் போட்டி அமைப்பு குழுவினர் அவர் யார்? என்பது குறித்து எந்தவித விவரத்தையும் வெளியிடவில்லை. ஒலிம்பிக் வீரர்கள் தங்கிய ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா, போட்டி அமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தில் தங்கியவருக்கு கொரோனா பாதிப்பு என்று செய்திகள் வெளியான நிலையில் முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவி இருப்பது பரபரப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் எதுவும் எளிதே: இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாபர் அசாம்
புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப் பார்வையாளர்களை நியமனம்
காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்
சட்டசபை தேர்தல் முடிவுகள்; அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம் ஆட்சி: சிக்கிமில் பாஜக, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட இல்லை
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இவிஎம் சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்
சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமல்: தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்
மக்களவை தேர்தல் நிறைவுபெற்றது கடைசிக்கட்டத்தில் 60% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை
ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!
இடைக்கால ஜாமீன் கேட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிறப்பு நீதிமன்றம்