கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொடர வெளியூர்களுக்குதான் செல்ல வேண்டும். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், தங்களது மேற்படிப்பை படிக்காமலே விட்டு விடும் அவலநிலை ஏற்படுகிறது. அதேநேரம் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரி இருப்பதால் மாணவிகள் தங்களது மேற்படிப்பை எளிதில் படித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகின்றனர். இதேபோல் மேற்படிப்பை தொடர மாணவர்களுக்கும் ஒரு அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுபற்றி கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார், திமுக வெற்றி பெற்ற உடன் கொடைக்கானலில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.