சேலம்: சேலம் அரசு போக்குவரத்துகழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளராக இருப்பவர் சென்னகிருஷ்ணன். கண்டக்டரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சேலம் லஞ்ச ஒழிப்புதுறைக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புகார் சென்றது. அவர் மீது வழக்கு பதிவு செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டனர்.
ஆளுங்கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதற்கு அதிகாரிகளும் துணை போனதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் புதியதாக நியமிக்கப்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள், கிடப்பில் உள்ள வழக்குகளை தூசி தட்டி பார்த்தனர். அப்போது தான் சென்னகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தாமல் இருந்ததை கண்டுபிடித்தனர்.