தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிக்சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணையில் துப்பாக்கி சூடு நடந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதுகுறித்து ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒருநபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை ஜூலை 5ம்தேதி துவங்கி நேற்று வரையில் நடந்தது. 28வது கட்ட விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிப்பதற்காக அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 95 பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.